பல மலையாள திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து பிரபலமான அஸ்வதி பாபு என்ற மலையாள நடிகை போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயதாகும் அஸ்வதி பாபு, பல மலையாள திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருவதோடு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அஸ்வதி பாபுவிடம் எக்ஸ்டசி என்ற போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று அஸ்வதியின் வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது, அவரது வீட்டில் பல லட்சங்கள் மதிப்புள்ள எக்ஸ்டசி போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் அஸ்வதி மற்றும் அவரது கார் டிரைவர் பினாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பினாய் தான் பெங்களூரில் இருந்து அந்த போதைப் பொருளை வாங்கி வந்து அஸ்வதியிடம் கொடுத்துள்ளார்.
ரகசிய தகவல் கிடைத்த பிறகு போலீசார் அஸ்வதியை சில வாரங்களாக கண்காணித்துள்ளனர். அதன் பிறகே நேற்று அஸ்வதியும், பினாயும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். இந்த போதைப் பொருள் நெட்வொர்க் பெரியதாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...