இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுமாகிறார்.
’பன்னீர் புஷ்பங்கள்’, ‘மெல்ல பேசுங்கள்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ’குணா’, ‘சின்ன மாப்பிள்ளை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவரும், பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதியும், தந்தை வழியில் தமிழ் சினிமாவில் இயக்குநராக உள்ளார். இவரும் தனது தந்தையை போல சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது ஸ்ரீ கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புது படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
இயக்குநர் விஜயிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கும் சஞ்சய் பாரதி, தான் இயக்கும் முதல் படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் ஈடுபட்டு உள்ளார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...