இளையராஜாவுக்கு எதிராக நடக்கும் சதி! - விளக்கம் அளித்த விஷால்
Wednesday December-19 2018

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார். சமீபகாலமாக அவருக்கு இரு சங்கங்களிலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

தேர்தலில் போது அறிவித்த எதையும் விஷால் செய்யவில்லை, என்று குற்றம் சாட்டுபவர்கள் அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கூறியுள்ளனர். மேலும், சங்க பணத்தை விஷால் முறைகேடு செய்துவிட்டதாக குற்றம் சாட்டுவதோடு, அதை மறைப்பதற்காகவே இளையராஜாவை கெளரவிக்கும் வகையில் ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை நடத்த விஷால் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கிடையே, விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கோஷ்ட்டியினர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதோடு, சாவியை அருகே உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள். 

 

இன்று நடைபெற்ற இந்த சம்பவத்தால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் விஷால், ”இளையராஜாவை கெளரவிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் அவருக்காக எடுக்கப்படும் விழாவை தடுத்து நிறுத்தப் பார்க்கிறார்கள். சங்கத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. கணக்குகள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். விழாவும் திட்டமிட்டபடி நடக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

3918

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

Recent Gallery