சினிமா நடிகைகளைப் போல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளும் மக்களிடம் பிரபலமடைந்து விடுகிறார்கள். இப்படி டிவி சீரியல் மூலம் பிரபலமானர்களின் பட்டியலில் டாப் லிஸ்ட்டில் இருப்பவர்களில் ரச்சிதாவும் ஒருவர். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சவணன் மீனாட்சி’ தொடரில் பல வருடங்களாக மீனாட்சி வேடத்தில் நடித்து வந்தவர் ரச்சிதா.
தற்போது அவர் நடித்த ‘ராஜா ராணி’ சீரியல் முடிந்துவிட்ட நிலையில், ரச்சிதா வேறு எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் கஷ்ட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குநருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாகவே அவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், நடிக்க வாய்ப்பு வராத நிலையில், ரச்சிதா விளம்பரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக பெண் தொழிலதிபர்கள் தயாரிக்கும் பொருட்களை விளம்பரப் படுத்தும் பணியில் இறங்கியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கும் ரச்சிதா, பெண்களின் கோரிக்கைகளால் தான் இந்த பணியை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...