’சரவணன் மீனாட்சி’ ரச்சிதாவுக்கு வந்த பரிதாப நிலை!
Wednesday December-26 2018

சினிமா நடிகைகளைப் போல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளும் மக்களிடம் பிரபலமடைந்து விடுகிறார்கள். இப்படி டிவி சீரியல் மூலம் பிரபலமானர்களின் பட்டியலில் டாப் லிஸ்ட்டில் இருப்பவர்களில் ரச்சிதாவும் ஒருவர். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சவணன் மீனாட்சி’ தொடரில் பல வருடங்களாக மீனாட்சி வேடத்தில் நடித்து வந்தவர் ரச்சிதா.

 

தற்போது அவர் நடித்த ‘ராஜா ராணி’ சீரியல் முடிந்துவிட்ட நிலையில், ரச்சிதா வேறு எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் கஷ்ட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குநருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாகவே அவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

 

இந்த நிலையில், நடிக்க வாய்ப்பு வராத நிலையில், ரச்சிதா விளம்பரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக பெண் தொழிலதிபர்கள் தயாரிக்கும் பொருட்களை விளம்பரப் படுத்தும் பணியில் இறங்கியுள்ளார்.

 

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கும் ரச்சிதா, பெண்களின் கோரிக்கைகளால் தான் இந்த பணியை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Related News

3941

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

Recent Gallery