கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதும் உறுதியாகிவிட்டது.
‘பேட்ட’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதோடு, அந்த படத்திற்கு பிறகு மேலும் ஒரு படத்தில் நடிக்கவும் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளாராம். தற்போது அந்த படத்தை இயக்கும் இயக்குநரையும் ரஜினிகாந்த் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
கார்த்தி நடிப்பில் வெற்றி பெற்ற ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கியவரும், அஜித்தின் 59 வது படத்தை இயக்குபவருமான வினோத் தான் ரஜினிகாந்தின் புதிய படத்தையும் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

இளம் இயக்குநர்களிடம் கதை கேட்க தொடங்கியிருக்கும் ரஜினிகாந்த், சமீபத்தில் இயக்குநர் வினோத்திடம் கதை ஒன்றை கேட்டதோடு, கதை தனக்கு பிடித்திருப்பதாகவும், கதையை இன்னும் விரிவாக எழுதும்படியும் கூறியுள்ளாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்த பிறகு வினோத் படத்தில் தான் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறாராம்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...