குழந்தை பெற்ற பிறகு தான் திருமணம்! - ஷாக் கொடுக்கும் தமிழ் நடிகை
Wednesday December-26 2018

சாதாரண மக்களிடம் லிவ் இன் ரிலேஷன்ஷிப் அதிகரித்து வரும் நிலையில், சினிமாவில் இத்தகைய உறவு முறை ரொம்பவே சகஜமாகிவிட்டது. இருப்பினும் இது குறித்து எந்த நடிகையோ, நடிகரோ வெளிப்படையாக இதுவரை பேசியதில்லை.

 

ஆனால், தற்போது அதை மாற்றியிருக்கும் நடிகை ஒருவர், லிவ் இன் ரிலேஷன்ஷிப் குறித்து வெளிப்படையாக பேசியது மட்டும் இன்றி, தனது பேச்சில் ஒரு படி மேலே சென்று, அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.

 

சாந்தனு நடித்த ‘கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மி கவுதம். அப்படத்தை தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்த இவர், பிறகு தெலுங்கு சினிமாவுக்கு போய்விட்டார். ஆந்திராவை சேர்ந்த இவர், தற்போது ‘ஜபர்தஸ்த்’ என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

 

ஏராளமான ரசிகர்களைக் கொண்ட ரேஷ்மி, ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய போது, அவரது காதல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவர், “திருமணம் எப்போது?” என்று கேட்க, அதற்கு ரேஷ்மி மேனன், “முதலில் குழந்தை பெற்றுக்கொண்டு பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன். அதனால் இன்னும் தாமதமாகும்.” என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.

 

Reshmi Menon

 

சுதீஷ் என்பவரை காதலித்து வரும் நடிகை ரேஷ்மி மேனன், அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

3952

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

Recent Gallery