Latest News :

மகிழ்ச்சியில் ‘சீதக்காதி’ தயாரிப்பாளர்கள்!
Thursday December-27 2018

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சீதக்காதி’ சராசரி தமிழ்த் திரைப்படமாக அல்லாமல், வித்தியாசமான திரைப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரவேற்பால், படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

 

படக்குழுவின் முக்கிய நோக்கமே மேடை நாடக உலகம் மற்றும் அதன் கலைஞர்களுக்கு அர்ப்பணம் செய்வது என்பது தான். யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களை சென்று சேர்ந்திருக்கிறது படம். எனினும், அவர்கள் தனித்துவமான கருத்துடைய ஒரு திரைப்படத்தை தயாரிக்க கிடைத்த அட் ஹிர்ஷ்டத்தையே முழுமையாக மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள். 

 

ஹாலிவுட்டுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய கதையை எடுத்தது பெருமை. இந்த அற்புதமான படைப்பை உருவாக்கிய இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய, நாடக கலைஞர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள, அதன் வழியாக இன்று தமிழ் சினிமாவில் ‘மக்கள் செல்வன்’ ஆக மாறியுள்ள விஜய் சேதுபதி ஆகியோர் மீது மிகுந்த மரியாதையில் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

Related News

3957

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery