தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்த உதயநிதி, ஹீரோக்கள் பட்டியலில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்ட போதிலும், தான் நடிக்கும் படங்களை தனது சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாகவே தயாரித்து வந்தவர் முதல் முறையாக தனது சொந்த நிறுவம் தவிர்த்து வேறு ஒரு நிறுவனத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
’இப்படை வெல்லும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ‘தூங்கா நகரம்’, ’சிகரம் தொடு’ ஆகிய படங்களை இயக்கிய கெளரவ் இயக்குகிறார். மஞ்சுமா மோகன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க தற்போது விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.
ஆனால், அவர் நடிகராக அல்ல, பின்னணி குரல் கலைஞராக, ஆம், இப்படத்தின் சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுக்கப் போகிறார். இது தொடர்பாக இயக்குநர் கெளரவ், விஜய் சேதுபதியை அனுகி கேட்டதுடன், சில காட்சிகளை போட்டு காட்டியுள்ளார். அந்த காட்சிகளைப் பார்த்த அவர் உற்சாகமடைந்து உடனே பின்னணி குரல் கொடுக்க சம்மதித்து விட்டாராம். விஜய் சேதுபதி தங்களது படத்தில் பங்குகொள்வது தங்களுக்கு பெருமையாக உள்ளது என்று இயக்குநர் கெளரவ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...