Latest News :

பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்! - ஏன் தெரியுமா?
Saturday December-29 2018

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய சின்மயி, அவ்வபோது சில ட்விட்டர் பதிவுகளின் மூலம் தொடர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவர் கூறிய பாலியல் புகாருக்கு சினிமா நடிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் திடீரென்று டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். அவரது நீக்கத்திற்கு டப்பிங் யூனியனின் தலைவர் ராதாரவி தான் காரணம் என்றும் சின்மயி குற்றம் சாட்டினார்.

 

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த ராதாரவி, சின்மயி பல ஆண்டுகளாக சந்தா கட்டாமல் இருந்ததால் அவரை நீக்கியிருக்கிறார்கள், என்று விளக்கம் அளித்தார். அதே சமயம், டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்தால் தான் திரைப்படங்களில் டப்பிங் பேச முடியும், என்பதால் சின்மாயி இனி தான் டப்பிங் பேசப்போவதில்லை, என்று கூறியதோடு, 96 படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசியதே தனது கடைசிப் படம் என்றும் கூறியிருந்தார்.

 

இதற்கிடையே, டப்பிங் கலைஞர்கள் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதம் யூனியன் எடுத்துக் கொள்கிறது, என்று சின்மயி கூறியதற்கு கண்டனம் தெரிவித்த டப்பிங் யூனியன் நிர்வாகிகள், இது குறித்து அளித்த விளக்கத்தில், ”சின்மயி ரூ.1.5 லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்துக்கொள்வோம்”, என்று தெரிவித்திருக்கிறது.

 

இந்த செய்தியை சுட்டிக்காட்டி சின்மயி ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதமும், ரூ.1.5 லட்சம் கொடுக்க வேண்டுமாம். 2006-ம் ஆண்டு முதல் என்னை வைத்து டப்பிங் யூனியன் நிறைய வருவாய் பார்த்தது.

 

ஆனால் நான் இப்போது என் வேலை உரிமைக்காக ரூ.1.5 லட்சம் கட்ட வேண்டுமா? ஒன்று இரண்டு படங்களில் டப்பிங் பேசியவர்கள் கூட யூனியனில் ஆயுள் கால உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

 

12 ஆண்டுகளாக யூனியனில் இருக்கும் நான் புதிய உறுப்பினராக சேர வேண்டுமா? டப்பிங் யூனியனிடமும், ராதாரவியிடமும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறேன்.

 

யூனியனில் உறுப்பினராக சங்க விதிப்படி 2,500 ரூபாய் கட்டினாலே போதும். அப்படி இருக்கையில் எனக்கு மட்டும் ஏன் ரூ.1.5 லட்சமும் மன்னிப்பு கடிதமும் என்று தெரியவில்லை.” என்று தெரிவித்திருக்கிறார்.

Related News

3977

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery