தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அனுஷகா ‘பாகுபலி’ இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார். அப்படங்களுக்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். காரணம், அவர் உடல் அதிகரித்திருப்பது தான். தற்போது உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அனுஷ்கா ஒரு படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம். அதில் அவர் கண் பார்வை இல்லாத, காது கேட்காத பெண்ணாக நடிக்கிறாராம்.
ஏராளமான பட வாய்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் தவிர்த்து வந்த அனுஷ்கா, இப்படத்தை ஒப்புக்கொண்டதற்கு காரணம், இந்த வேடம் தனக்கு சவாலாக இருக்கும் என்பதாலும், இப்படத்தின் மூலம் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாம் என்பது தானாம்.
மேலும், இந்த வேடத்திற்காக தற்போது பார்வையற்றவர்களை சந்தித்து அவர்களுடன் பழகி வரும் அனுஷ்கா, அவர்களது மன நிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து அதைப்போன்று தனது நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறாராம்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...