தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அனுஷகா ‘பாகுபலி’ இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார். அப்படங்களுக்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். காரணம், அவர் உடல் அதிகரித்திருப்பது தான். தற்போது உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அனுஷ்கா ஒரு படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம். அதில் அவர் கண் பார்வை இல்லாத, காது கேட்காத பெண்ணாக நடிக்கிறாராம்.
ஏராளமான பட வாய்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் தவிர்த்து வந்த அனுஷ்கா, இப்படத்தை ஒப்புக்கொண்டதற்கு காரணம், இந்த வேடம் தனக்கு சவாலாக இருக்கும் என்பதாலும், இப்படத்தின் மூலம் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாம் என்பது தானாம்.
மேலும், இந்த வேடத்திற்காக தற்போது பார்வையற்றவர்களை சந்தித்து அவர்களுடன் பழகி வரும் அனுஷ்கா, அவர்களது மன நிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து அதைப்போன்று தனது நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறாராம்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...