வேல் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளையின் அறங்காவலரும், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ், நடிகர் சங்க கட்டிடத்திற்குள் கட்டப்படும் திருமண மண்டபகத்திற்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலன் பெயரில் அமைய உள்ள இந்த திருமண மண்டபம் கட்டுவதற்கு ஆகும் மொத்த செலவையும் ஐசரி கணேஷே ஏற்றுக்கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், முதல் கட்டமாக ரூ.1 கோடியை தற்போது வழங்கியுள்ளார்.
நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை ஐசரி கணேஷ் சமீபத்தில் வழங்கினார். இதற்காக நடிகர் சங்கம் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...