பிரபல நடிகை கொலை! - கைதாகும் கணவர்
Friday January-04 2019

பிரபல நடிகை சிம்ரன் சிங் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஆற்று பாலத்தின் கீழ் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஓடியா ஆல்பம் நடிகையான சிம்ரன் சிங்,  பல சம்பல்பூர் ஆல்பம் பாடல்களில் நடித்திருப்பதொடு, சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மக்களிடம் பிரபலமாக இருக்கும் இவரது உடல் நேற்று மகாநதி ஆற்றின் குறுக்கே கோய்ரா மாத்தா என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அடியில் கிடந்துள்ளது.

 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரது முகம் மற்றும் தலையில் அதிகமான காயங்கள் இருந்தது.

 

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவரை கொலை செய்தது யார், என்ன காரணம் என போலீசார் துப்பறிந்து வருகின்றனர்.

 

Simran  Singh

 

நடிகையின் குடும்பத்தினர் அவரின் கணவர் தான் கொலை செய்துள்ளார் என புகார் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவர் தான் கொலையாளி என்று சிம்ரனின் குடும்பத்தார் தொடர்ந்து கூறிவருவதால், அவரை போலீசார் கைது செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

4004

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery