‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
‘அட்ட கத்தி’ தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தினை, பா.ரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.
‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழு மூலம் மக்களிடம் பிரபலமான தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘காலா’, ‘கபாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றிய த.ராமலிங்கும் இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றிய, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. இயக்குநர்கள் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்கள்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...