Latest News :

பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’!
Friday January-04 2019

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித், தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

 

‘அட்ட கத்தி’ தினேஷ்  ஹீரோவாக நடிக்கும் இப்படத்தினை, பா.ரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.

 

‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழு மூலம் மக்களிடம் பிரபலமான தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘காலா’, ‘கபாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றிய த.ராமலிங்கும் இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றிய, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. இயக்குநர்கள் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்கள்.

Related News

4008

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery