பிரபல கலை இயக்குநராக கடந்த 16 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பயணித்த ஆ.உமாஷங்கர், இயக்குநராகிறார்.
பல குறும்படங்களை இயக்கி பாராட்டு பெற்ற உமாஷங்கர் இயக்கத்தில், ஓம் ஸ்ரீ சாய் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘ஈஷா’ என்ற குறும்படம் டெல்லியில் நடைபெற்ற தாதா சாகிப் பால்கி 2017 விழாவில் சிறந்த படங்களுக்கான தனி தகுதி சான்றிதழ் பெற்றது.
உலகம் முழுவதும் இருந்து 1700 படங்களுக்கு மேற்பட்ட படங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டதில் தமிழ்நாட்டில் இருந்து இப்படம் தேர்வு செய்யப்பட்டு அவ்விழாவில் திரையிடப்பட்டது. மேலும், இதில் பணியாற்றிய இசையமைப்பாளர் குரு கல்யாண், ஒளிப்பதிவாளர் கிரிஷோடபர் ஜோசப், எடிட்டர் சாரதி ஆகியோருக்கும் சிறப்பு தனி தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
இயக்குநர் உமாஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் குருகல்யாண் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘குறள்-146’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்ட பணி பாடல் பதிவுடன் தொடங்குகிறது.
தனது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதும் இயக்குநர் உமாஷங்கர் தற்போது ‘குறள்-16’ படத்திற்கான பணியில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...