தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உயர்ந்துள்ள விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு, அவரது ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் எதாவது செய்தால் அது விஜயை தான் பாதிப்பதால், ரசிகர் மன்றங்களை விஜய் தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதற்கிடையே, விஜயின் ஆரம்பக்காலத்தில் இருந்து அவரது ரசிகர் மன்ற பணிகளை கவனித்து வந்ததோடு, அவரது பி.ஆர்.ஓ-வாகவும் பணியாற்றிய பி.டி.செல்வகுமார், ‘புலி’ படத்தையும் தயாரித்தார். அப்படம் வெளியீட்டின் போது ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால், பி.டி.செல்வகுமார் தற்போது விஜயை விட்டு விலகியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பி.டி.செல்வகுமார், இப்போதைய ஹிட் நடிகர் என தளபதியை மட்டுமே புகழ்ந்து மற்றவர்களை விமர்சித்து பேசியிருந்தார். இது கொஞ்சம் சர்ச்சையாக பேசப்பட, இது குறித்து விளக்கம் அளித்த விஜய் தரப்பு, பி.டி.செல்வகுமார் விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ, அவருக்கும் விஜய்க்கும் தற்போது எந்தவித தொடர்பும் இல்லை, எனவே அவரது இதுபோன்ற பேச்சுக்களை விஜய் பேசுவதாக எண்ண வேண்டாம், என்று தெரிவித்தது.

விஜய் தரப்பின் இந்த விளக்கத்திற்கு பதில் அளித்திருக்கும் பி.டி.செல்வகுமார், ”எனக்கும் விஜய்க்கும் இடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். விஜய்க்கும் அவரது குடும்பத்திற்கும் உண்மையான விஸ்வாசம் உள்ள மனிதராக தான் இன்று வரை நான் இருந்து வருகிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...