Latest News :

விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கும் சூர்யா!
Saturday January-05 2019

’தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வரும் சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘காப்பான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் முடிந்ததும் ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

 

இந்த நிலையில், சசிகுமார் இயக்க இருக்கும் வரலாற்று படத்திலும் சூர்யா நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான சசிகுமார், தற்போது நடிகராக பிஸியானதால், ‘ஈசன்’ படத்திற்குப் பிறகு அவர் படம் இயக்கவில்லை. இதற்கிடையே, வரலாற்று கதை ஒன்றை எழுதிய சசிகுமார், அதை விஜயிடம் கூற, அவரும் கதையை கேட்டுவிட்டு பிடித்திருப்பதாக கூறியதோடு, நிச்சயம இந்த படத்தை பண்ணலாம், என்று கூறினாராம்.

 

ஆனால், தற்போதுவரை சசிகுமாரின் படம் குறித்து விஜய் எதுவும் கூறாததால், வேறு ஒரு ஹீரோவை வைத்து அப்படத்தை இயக்க நினைத்த சசிகுமார், சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

 

அநேகமாக இயக்குநர் சுதாவின் படத்திற்கு பிறகு சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பார், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த படம் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Related News

4019

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery