அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ரஜினியின் ‘பேட்ட’ என இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகை குறி வைத்து ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகின்றது. இந்த இரு படங்களுக்காகவும், திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக தினமும் ஐந்து காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், ரசிகர்களுக்காக சில திரையரங்கங்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதோடு, ஒரு டிக்கெட்டை ரூ.1000 க்கும் விற்பனை செய்துள்ளது.
இதில், விஸ்வாசம் படம் சென்னையின் சில திரையரங்குகளில் நள்ளிரவு 1.30 மணி காட்சிகள் போடப்பட்டு, அதற்கான டிக்கெட்டை ரூ.1000 விற்பனை செய்தும் முடித்துவிட்டது.
ஆனால், ரஜினியின் பேட்ட படத்திற்கு இதுபோன்ற நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. காலை 8 மணிக்கு மேல் தான் பேட்ட படத்தின் முதல் காட்சிக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்படி அஜித் படத்திற்கு ஓகே சொல்லியிருக்கும், தமிழக அரசு ரஜினி படத்திற்கு நோ சொல்லியிருப்பதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...