ஆஜித்துக்கு ஓகே, ரஜினிக்கு நோ! - ரசிகர்கள் அதிர்ச்சி
Wednesday January-09 2019

அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ரஜினியின் ‘பேட்ட’ என இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகை குறி வைத்து ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகின்றது. இந்த இரு படங்களுக்காகவும், திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக தினமும் ஐந்து காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதே சமயம், ரசிகர்களுக்காக சில திரையரங்கங்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதோடு, ஒரு டிக்கெட்டை ரூ.1000 க்கும் விற்பனை செய்துள்ளது.

 

இதில், விஸ்வாசம் படம் சென்னையின் சில திரையரங்குகளில் நள்ளிரவு 1.30 மணி காட்சிகள் போடப்பட்டு, அதற்கான டிக்கெட்டை ரூ.1000 விற்பனை செய்தும் முடித்துவிட்டது.

 

ஆனால், ரஜினியின் பேட்ட படத்திற்கு இதுபோன்ற நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. காலை 8 மணிக்கு மேல் தான் பேட்ட படத்தின் முதல் காட்சிக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இப்படி அஜித் படத்திற்கு ஓகே சொல்லியிருக்கும், தமிழக அரசு ரஜினி படத்திற்கு நோ சொல்லியிருப்பதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related News

4038

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery