சிம்பு நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில், இப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் மற்றும் படத்தின் இயக்குநர் சிம்பு மீது பல குற்றச்சாட்டுக்களை கூறினார்கள்.
மேலும், சிம்பு சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் தான் படத்தின் பட்ஜெட் அதிகமானதாகவும், படத்தின் கதையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்ததாகவும் கூறினார்கள். மேலும், சிம்பு குறித்து மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் அளித்தார்.
இந்த நிலையில், தன்னை பற்றி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு பரப்பி வருவதாக சிம்பு நீதிமன்றத்தில் மானநஷ்ட்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தன்னை பற்றி அவதூறு கூறி வரும் மைக்கேல் ராயப்பன், தனக்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும், என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்க தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...