Latest News :

மீண்டும் விமலை இயக்கும் சற்குணம்!
Thursday August-31 2017

‘களவாணி’ படத்தின் மூலம் விமலை ஹீரோவாக்கியதோடு இயக்குநர் சற்குணம், ‘களவாணி-2’ படத்திற்காக மீண்டும் விமலை இயக்குகிறார்.

 

2009-ல் ‘களவாணி’ படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரியான விமல், நடிப்பில் தொடர்ந்து ஆண்டுக்கு இரணடு முதல் ஐந்து படங்கள் வரை வெளியாகி கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு ‘அஞ்சல’ மற்றும் ‘மாப்பிள்ளை சிங்கம்’ படங்களுக்கு பிறகு விமலின் எந்த படமும் வெளியாகவில்லை என்றாலும், “புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்” என்ற ரீதியில் தற்போதும் விமல் உற்சாகத்தோடு தான் இருக்கிறார்.

 

இதே உற்சாகத்தோடு நேற்று தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய விமல், தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதால் மேலும் உற்சாகமடைந்துள்ளாராம். விமல் சொந்தமாக தயாரித்துள்ள ‘மன்னர் வகையறா’ படத்தை தொடர்ந்து மேலும் இரண்டு படங்களை தயாரித்து நடிக்க உள்ளார்.

 

அதில் ஒன்று, ‘வெற்றிவேல்’ படத்தை இயக்கிய வசந்தமணி இயக்க, மற்றொரு படத்தை சற்குணம் இயக்குகிறார். அப்படம் தான் ‘களவாணி-2’. இதில் கஞ்சா கருப்பு மற்றும் சூரி கூட்டணியும் தொடர்கிறது.

 

தற்போது மாதவனை இயக்க உள்ள சற்குணம் அப்படம் முடிந்ததும், ‘களவாணி-2’ படத்தை தொடங்க உள்ளார்.

Related News

405

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery