‘களவாணி’ படத்தின் மூலம் விமலை ஹீரோவாக்கியதோடு இயக்குநர் சற்குணம், ‘களவாணி-2’ படத்திற்காக மீண்டும் விமலை இயக்குகிறார்.
2009-ல் ‘களவாணி’ படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரியான விமல், நடிப்பில் தொடர்ந்து ஆண்டுக்கு இரணடு முதல் ஐந்து படங்கள் வரை வெளியாகி கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு ‘அஞ்சல’ மற்றும் ‘மாப்பிள்ளை சிங்கம்’ படங்களுக்கு பிறகு விமலின் எந்த படமும் வெளியாகவில்லை என்றாலும், “புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்” என்ற ரீதியில் தற்போதும் விமல் உற்சாகத்தோடு தான் இருக்கிறார்.
இதே உற்சாகத்தோடு நேற்று தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய விமல், தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதால் மேலும் உற்சாகமடைந்துள்ளாராம். விமல் சொந்தமாக தயாரித்துள்ள ‘மன்னர் வகையறா’ படத்தை தொடர்ந்து மேலும் இரண்டு படங்களை தயாரித்து நடிக்க உள்ளார்.
அதில் ஒன்று, ‘வெற்றிவேல்’ படத்தை இயக்கிய வசந்தமணி இயக்க, மற்றொரு படத்தை சற்குணம் இயக்குகிறார். அப்படம் தான் ‘களவாணி-2’. இதில் கஞ்சா கருப்பு மற்றும் சூரி கூட்டணியும் தொடர்கிறது.
தற்போது மாதவனை இயக்க உள்ள சற்குணம் அப்படம் முடிந்ததும், ‘களவாணி-2’ படத்தை தொடங்க உள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...