கடந்த 2017 ஆம் தேதி ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பெரும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மெரினா புரட்சி’ படத்திற்கு காரணம் சொல்லாமல் தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்து வருகிறது.
தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த இரண்டு முறையும் காரணமே சொல்லாமல் நிராகரிக்கப்பட்ட நிலையில், ‘மெரினா புரட்சி’ படத்தை தயாரித்த நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவில், ”மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும்” என்றும் கோரியிருந்தது.
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கில் தற்போது நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, ”இந்த தீர்ப்பு நகல் கிடைத்த 2 நாட்களுக்குள் படத்தின் இயக்குநர் எம்.எஸ். ராஜ் தன்னிடமுள்ள ஆதாரங்கள் விளக்கங்கள், நியாயங்களுடன் ரிவைசிங் கமிட்டி முன்பு ஆஜராக வேண்டும்.
அதிலிருந்து 7 நாட்களுக்குள் தணிக்கைத்துறை, படத்திலுள்ள நல்ல நோக்கங்கள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ‘மெரினா புரட்சி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...