கல்லூரி மாணவிகளின் கனவை நினைவாக்கிய இளையராஜா!
Saturday January-12 2019

இசையமைப்பாளர் இளையராஜா தற்போது கல்லூரி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பாடல் பாடி வருவதோடு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாலும் செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் எத்திராஜ் மற்றும் ராணி மேரி கல்லூரிகளின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர், அங்கே தனது பிறந்தநாளையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

 

மேலும், நிகழ்ச்சியில் பாட்டு பாடிய இளையராஜா, மாணவிகளுடன் கலந்துரையாடியதோடு, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 

அப்போது அவரது இசையைப் பற்றியும், இசையில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் அவரிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட மாணவிகளில் சிலர், நிகழ்ச்சியில் பாட்டு பாடியதோடு, இளையராஜா இசையில் பாட்டு பாட தாங்கள் விரும்புவதாகவும், அது தங்களது கனவு என்றும் கூறினார்கள்.

 

இந்த நிலையில், பாட்டு பாட விரும்பிய அந்த இரண்டு கல்லூரி மாணவிகள் சிலரை அழைத்த இளையராஜா, அவர்களிடம் குரல் சோதனை செய்து, அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 பேரை தேர்வு செய்திருக்கிறார்.

 

இந்த 9 மாணவிகளும், இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாக உள்ளனர். இதன் மூலம் மாணவிகளின் கனவை இளையராஜ நினைவாக்கிவிட்டார்.

Related News

4058

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery