இசையமைப்பாளர் இளையராஜா தற்போது கல்லூரி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பாடல் பாடி வருவதோடு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாலும் செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் எத்திராஜ் மற்றும் ராணி மேரி கல்லூரிகளின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர், அங்கே தனது பிறந்தநாளையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
மேலும், நிகழ்ச்சியில் பாட்டு பாடிய இளையராஜா, மாணவிகளுடன் கலந்துரையாடியதோடு, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவரது இசையைப் பற்றியும், இசையில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் அவரிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட மாணவிகளில் சிலர், நிகழ்ச்சியில் பாட்டு பாடியதோடு, இளையராஜா இசையில் பாட்டு பாட தாங்கள் விரும்புவதாகவும், அது தங்களது கனவு என்றும் கூறினார்கள்.
இந்த நிலையில், பாட்டு பாட விரும்பிய அந்த இரண்டு கல்லூரி மாணவிகள் சிலரை அழைத்த இளையராஜா, அவர்களிடம் குரல் சோதனை செய்து, அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 பேரை தேர்வு செய்திருக்கிறார்.
இந்த 9 மாணவிகளும், இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாக உள்ளனர். இதன் மூலம் மாணவிகளின் கனவை இளையராஜ நினைவாக்கிவிட்டார்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...