தமிழ் சினிமாவில் கதை திருட்டு சர்ச்சைகள் பெருகி வருகின்றன. விஜயின் ‘சர்கார்’, விஜய் சேதுபதியின் ‘96’ ஆகியப் படங்களும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. அதிலும் சர்கார் படம் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இறுதியாக செட்டில்மெண்டும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதாவது, வெங்கடேஷ் - நயந்தாரா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘துளசி’ திரைப்படத்தின் கதைப்படி, கணவரின் முரட்டுத்தனத்தனம் பிடிக்காமல் மனைவி மகனை அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறார். பிறகு மகனை சந்திக்க தந்தை போகும் போது, அவருக்கு பிரச்சினை வர, அதில் இருந்து மகனை காப்பாற்றினாரா, குடும்பம் ஒன்று சேர்ந்ததா, என்பது தான் கதை.
இந்த கதையும், விஸ்வாசம் கதையும் ஒன்றாக இருப்பதால் இது தொடர்பாக பிரச்சினை எழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், ஒருவேளை ‘துளசி’ படத்தின் ரைட்ஸை இயக்குநர் சிவா முறையாக வாங்கியே இந்த படத்தை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காரணம், விஸ்வாசம் டைடில் கார்டில் கதை என்று சிவா பெயருடன் சேர்த்து ஒன்னொருவர் பெயரும் வருகிறது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...