கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய மணிரத்னம், அதில் இருந்து கடந்த ஆண்டு வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படம் வரை ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்று வருகிறார்.
ஒளிப்பதிவாளர், எடிட்டர் என்று மணிரத்னம் அவ்வபோது தனது தொழில்நுட்ப குழுவினரை மாற்றினாலும், ஏ.ஆர்.ரஹ்மானை மட்டும் மாற்ற மாட்டார். ரஹ்மானும் மணிரத்னம் படம் என்றால், கூடுதல் கவனம் செலுத்துவார்.
இந்த நிலையில், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் வரலாற்று படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும், அதில் விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், இப்போதைக்கு வரலாற்று படம் இயக்கும் எண்ணம் மணிரத்னத்திற்கு இல்லையாம். அதற்கு பதிலாக குறுகிய கால தயாரிப்பாக ஜி.வி.பிர்காஷை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்த படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளாராம்.
மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ‘96’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தாவை மணிரத்னம் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், 26 வருடங்களாக இணைந்து பணியாற்றி வந்த மணிரத்னம் - ரஹ்மான் கூட்டணி பிரிகிறது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...