நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன், வர மட்டேன்...என்று கூறி மக்களை குழப்பி வந்த நிலையில், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரது மறைவுக்கு பிறகு அரசியலில் இறங்கியுள்ளார். இருப்பினும், தனது கட்சி மற்றும் கொடி, சின்னம் போன்றவற்றை அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அதே சமயம், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சில குழப்பங்கள் நிலவினாலும், அவரது ரசிகர் மன்றங்கள் ‘ரஜினி மக்கள்’ மன்றம்’ என்ற பெயரில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, ரஜினிகாந்த் விரைவில் டிவி சேனல் ஒன்றை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் மூன்று பெயரிகளை பதிவும் செய்திருக்கிறார். இருப்பினும், இன்னும் அவரது கட்சி பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தனுஷ் தனது குடும்பத்தோடு சாமி தரிசனத்திற்காக திருப்பதி சென்றிருக்கிறார். அப்போது அவரிடம் பேசிய பத்திரிகையாளர்களில் ஒருவர், “வரும் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைக்கிறாரா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த தனுஷ், “சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன், அரசியல் பேச மாட்டேன். ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அவரே அறிவிப்பார், இதில் நான் எதுவும் சொல்ல முடியாது.” என்று கூறியுள்ளார்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...