‘பாகுபலி’ படத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வரும் அனுஷ்கா, பல படங்களை நிராகரித்து வந்த நிலையில், தற்போது ஒரு திகில் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோபா பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
அனுஷ்காவுடன் மாதவன், அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவரும் நடிக்கிறார்.
ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.
டி.ஜி.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில் கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...