உதயநிதியின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தவர் மதுமிதா. அப்படத்தில் இவரை சந்தானம் ஜாங்கிரி என்று அழைப்பார். அதனால் தற்போது தமிழ் சினிமாவே ஜாங்கிரி மதுமிதா என்று தான் அழைக்கிறது. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் ஜாங்கிரி மதுமிதா, சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, மதுமிதாவுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்ற பெண்ணுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதையடுத்து மதுமிதா மீது உஷா போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த மதுமிதா, மீண்டும் உஷாவுடன் தகராரில் ஈடுபட்டதோடு, அவரது கை கடித்து விட்டாராம். கடி வாங்கிய உஷா வலியால் துடித்ததோடு, மீண்டும் போலீசில் மதுமிதா மீது புகார் அளித்துள்ளார்.
மதுமிதாவும் போலீசில் புகார் அளிக்க, இருவருடைய புகாரையும் பெற்றுக் கொண்ட வளசரவாக்கம் போலீசார், தற்போது இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.
அறிமுக இயக்குநர் மைக்கேல் கே...
இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது...
‘மெளனகுரு’ திரைப்படம் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் சாந்தகுமார், தந்து இரண்டாவது படமான ‘மகாமுனி’ படத்திற்காக அதிகமான வருடங்களை இடைவெளியாக எடுத்துக் கொண்டாலும், கதையாசிரியராகவும், திரைப்படக்கள ஆசிரியராகவும் தனக்கென்று தனி ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றிருக்கிறார்...