உதயநிதியின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தவர் மதுமிதா. அப்படத்தில் இவரை சந்தானம் ஜாங்கிரி என்று அழைப்பார். அதனால் தற்போது தமிழ் சினிமாவே ஜாங்கிரி மதுமிதா என்று தான் அழைக்கிறது. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் ஜாங்கிரி மதுமிதா, சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, மதுமிதாவுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்ற பெண்ணுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதையடுத்து மதுமிதா மீது உஷா போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த மதுமிதா, மீண்டும் உஷாவுடன் தகராரில் ஈடுபட்டதோடு, அவரது கை கடித்து விட்டாராம். கடி வாங்கிய உஷா வலியால் துடித்ததோடு, மீண்டும் போலீசில் மதுமிதா மீது புகார் அளித்துள்ளார்.
மதுமிதாவும் போலீசில் புகார் அளிக்க, இருவருடைய புகாரையும் பெற்றுக் கொண்ட வளசரவாக்கம் போலீசார், தற்போது இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...