உதயநிதியின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தவர் மதுமிதா. அப்படத்தில் இவரை சந்தானம் ஜாங்கிரி என்று அழைப்பார். அதனால் தற்போது தமிழ் சினிமாவே ஜாங்கிரி மதுமிதா என்று தான் அழைக்கிறது. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் ஜாங்கிரி மதுமிதா, சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, மதுமிதாவுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்ற பெண்ணுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதையடுத்து மதுமிதா மீது உஷா போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த மதுமிதா, மீண்டும் உஷாவுடன் தகராரில் ஈடுபட்டதோடு, அவரது கை கடித்து விட்டாராம். கடி வாங்கிய உஷா வலியால் துடித்ததோடு, மீண்டும் போலீசில் மதுமிதா மீது புகார் அளித்துள்ளார்.
மதுமிதாவும் போலீசில் புகார் அளிக்க, இருவருடைய புகாரையும் பெற்றுக் கொண்ட வளசரவாக்கம் போலீசார், தற்போது இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...