தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகும், பழமையான தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்கும் ஏ.வி.எம் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் சுமார் 180 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறது.
பல தலைமுறைகளாக திரைப்படம் தயாரித்து வந்த இந்த நிறுவனம் கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு ‘முதல் இடம்’ என்ற படத்துடன் திரைப்படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டது. இதை தொடர்ந்து இனி ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பில் ஈடுபோவதில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்நிறுவனம் மீண்டும் படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘அயன்’ படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...