திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான பிருந்தா சாரதியின் முதல் கவிதத் தொகுப்பான ‘நடைவண்டி’ யின் 25 ஆம் ஆண்டு நிறைவையொட்டி அந்நூல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலின் வெளியீட்டு விழா, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் உள்ள டிஸ்கவரி புக்ஸ் அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 25 படைப்பாளிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
இயக்குநர் என்.லிங்குசாமி நூலை வெளியிட எழுத்தாளர் வண்ணதாசன் பெற்றுக் கொண்டார்.
நடிகை ரோகிணி, நடிகர் ஜோ மல்லூரி, இயக்குநர்கள் எம்.ஆர்.பாரதி, கேபிள் சங்கர், ராசி, அழகப்பன், நந்தா பெரியசாமி, எழுத்தாளர் பவா செல்லத்துரை, சீனிவாசன் நடராஜன், அஜயன் பாலா, கவிஞர்கள் இந்திரன், அறிவுமதி, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ஆருர் தமிழ்நாடன், ஜெயபாஸ்கரன், ரவிசுப்ரமணியன், சல்மா, ஆண்டாள் பிரியதர்ஷினி, அ.வெண்ணிலா, மெளனன் யாத்ரீகா, அய்யப்ப மாதவன், கயல், மனுஷி, லதா அருணாசலம், கதிர்மொழி, பா.ஜெய்கணேஷ், இசாக், வேல் கண்ணன், அருண்ஆரதி, பா.மீனாட்சி சுந்தரம், வசனகர்த்தா பொழிச்சலூர் அரவிந்தன், ஓவியர் செந்தில் மற்றும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் என ஏராளமானவர்கள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள்.
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...