Latest News :

மீண்டும் வேலை நிறுத்தத்தை அறிவித்தது பெப்சி - படப்பிடிப்புகள் பாதிப்பு!
Friday September-01 2017

தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) கடந்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பல்வேறு படங்களில் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், இன்று (செப்.1) முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

 

தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்ஸிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெப்ஸி கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இதனால் பல படங்களில் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் தலையிட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

 

இந்த நிலையில், நேற்று மாலை நடைபெற்ற பெப்சி பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பெப்சி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

 

இது குறித்து மேலும் பேசிய அவர், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நடவடிக்கை பெப்சியை அழிப்பதாக உள்ளது. பெப்சி ஊழியர்கள் அல்லாத பிற ஊழியர்களை வேலைகு சேர்க்க விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். இருக்கிறவர்களுக்கே வேலை இல்லாதபோது, புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பது குழப்பத்தையே ஏற்படுத்தும். பெப்சிக்கு எதிராக இன்னொரு அமைப்பை உருவாக்குவது வேதனை அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து பெப்சி தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக் கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

 

உள்ளுர் படப்பிடிப்புகளும், வெளியூர் படப்பிடிப்புகளும் நடைபெறாது. திரைப்பட தொழில்நுட்ப பணிகளும் நிறுத்தப்படும். வேலைக்கு புதிதாக ஆட்கள் எடுக்கும் முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப பெறும் வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.

 

முதல்வரையும், தொழிலாளர் நலத்துறை அமைச்சரையும் சந்தித்து இந்த பிரச்சினை குறித்து பேச இருக்கிறோம். வருகிற 5 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் வேலை நிறுத்தம் வேண்டாம் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தார். வேலை நிறுத்தத்தை தவிர, வேறு எங்களுக்கு வழி இல்லை. இதற்காக அவரிடமும் மற்ற புதிய தயாரிப்பாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது பெப்சி தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம்.” என்று தெரிவித்தார்.

Related News

410

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery