தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன், திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டவர் ரீ எண்ட்ரியாக சமீபத்தில் நடிக்க தொடங்கினாலும், வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவருக்கு, ரஜினியின் ‘பேட்ட’ பெரும் திருப்பத்தை கொடுத்திருக்கிறது.
ரஜினி எப்படி பேட்ட படத்தில் ரொம்ப இளமையாக இருந்தாரோ, அதை விட கூடுதல் இளையாக இருந்தவர் சிம்ரன் தான். சிம்ரனின் திரும்பிய இளமையை பார்த்த அவரது ரசிகர்கள், தற்போது சிம்ரனுக்காக தனி மன்றங்கள் வைக்க தொடங்கியிருக்கிறார்கள். அதே போல சிம்ரனும், இனி கதை தேர்வில் கவனம் செலுத்துவதோடும், மீண்டும் ஹீரோயினாக நடிப்பதற்கே முதலிடம் கொடுக்கவும் முடிவு செய்துவிட்டாராம்.
அந்த வகையில், தற்போது மாதவனுக்கு ஜோடியாக நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட்’ படத்தில் நம்பி நாராயணனாக நடிக்கும் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பதோடு, மாதவனே கதை எழுதி தயாரித்து இயக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...