‘காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாக நிலையில், அதே படத்தில் மேலும் மூன்று ஹீரோக்கள் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.
‘அக்னி நட்சத்திரம்’, ‘இருவர்’, ‘திருடா திருடா’, ’தளபதி’ என்று இரண்டு ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய மணிரத்னம் மூன்று ஹீரோக்களை வைத்து ‘ஆயுத எழுத்து’ என்ற படத்தையும் இயக்க, முதன் முறையாக நான்கு ஹோரோக்கள் இருக்கும் படத்தை இயக்குகிறார்.
விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் என தற்போது இரண்டு ஹீரோக்கள் ஒப்பந்தமாகியிருப்பதாகவும், மற்ற இரண்டு ஹீரோக்களை தேர்வு செய்யும் பணியில் மணிரத்னம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மணிரத்னம் படம் என்றதும் பெரும் ஆவலோடு இருந்த விஜய் சேதுப, தன்னுடன் மேலும் மூன்று ஹீரோக்கள் நடிக்கப் போகும் விஷயம் தெரிந்ததும் லேசா ஜர்க்கானாராம். இருந்தாலும், மணிரத்னம் படம் என்பதால் மனதை தேற்றிக் கொண்டு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...