நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா வெளிநாட்டில் கிராபிக்ஸ் துறையில் பயின்று வந்த நிலையில், ரஜினியை வைத்து ‘கோச்சுடையான்’ என்ற கிராபிக்ஸ் படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதற்கிடையே, சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவரை காதலித்து கடந்த 2010 ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து சினிமா தயாரிப்பு உள்ளிட்டவையில் ஈடுபட்ட செளந்தர்யா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ தொடங்கினார்.
இதற்கிடையே, செளந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த உடன், அவர் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்து, விவாகரத்தும் பெற்று விட்டவர், எனது குழந்தை தான் இனி என் உலகம், என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்த நிலையில், பெரிய தொழிலதிபரின் மகனுடன் காதல் வயப்பட்ட செளந்தர்யா இரண்டாவது திருமணத்திற்கு தயராகியுள்ளார். விசாகன் என்ற அவர் ‘வஞ்சகர் உலகம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். செளந்தர்யா - விசாகன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், திருமணம் தேதி வெளியாகமல் இருந்தது.
தற்போது செளந்தர்யா - விசாகன் திருமண தேதி வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி சென்னையில் உள்ள பெரிய மண்டபத்தில் செளந்தர்யா - விசாகன் நடைபெற உள்ளது.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...