சினிமாவில் நடிகர் நடிகைகள் விவாகரத்து என்பது எப்படி சாதாரணமான ஒன்றோ, அதுபோல அவர்களின் மருமணம் என்பதும் ரொம்ப சாதரணமான ஒன்று தான். அப்படி இருந்தாலும், விவாகரத்துக்கு பிறகோ, மறுமணத்திற்கு பிறகோ அவர்கள் நட்பாக பழகுவது கூட இல்லை, அவர் அவர் வழியில் செல்வது தான் வழக்கம்.
ஆனால், தமிழ் சினிமா நடிகை ஒருவர், தனது வழி தனி வழி என்பது போல, பெருந்தன்மையுடன், தனது கணவரின் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்ததற்காக வாழ்த்து கூறியதோடு, அவர்களை சந்தித்து அவர்களுடன் சில மணி நேரங்களையும் செலவிட்டுள்ளார்.
ஆம், தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி பிறகு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் காஜல் பசுபதி. இவர் நடன் இயக்குநர் சாண்டியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக சாண்டியை விவாகரத்தும் செய்துக்கொண்டார்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட காஜல், அதன் மூலம் பிரபலமடைந்த நிலையில், சாண்டியும் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில், சாண்டியின் இரண்டாவது மனைவியை சமீபத்தில் நேரில் சந்தித்திருக்கும் காஜல், அவரது குழந்தையுடன் சில மணி நேரங்களை செலவிட்டுள்ளார். மேலும், சாண்டியும், அவரது மனைவியும் அவர்களது குழந்தையை பார்க்க தன்னை அழைத்ததாகவும் காஜல், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Both of them are super kind to invite me to see their daughter. God bless y'all 😍😍😍had a great time. Tqsm https://t.co/22zOlOalAc
— Kaajal Pasupathi (@kaajalActress) January 23, 2019
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...