தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக உயர்ந்திருக்கும் யோகி பாபு, இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், அவரை அனுகும் தயாரிப்பாளர்கள் பலரிடம் தேதி இல்லை என்றும் அவர் மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், யோகி பாபு நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் போலீஸ் அவரை சந்தேகத்தின் பேரில் பிரித்து அடித்ததோடு, ரொம்ப நேரமாக ஸ்டேஷனில் வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் யோகி பாபு, நாடகத்தில் நடித்து முடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்த யோகி பாபுவை போலீஸார் மடக்கி பிடித்து விசாரித்தார்களாம். அந்த நேரம் சென்னையில் சாலையில் நின்றுக் கொண்டிருக்கும் பைக்குகள், கார்களை மர்ம நபர் எரிக்கும் சம்பவம் பரபரப்பானதால், அந்த நபர் யோகி பாபுவாக இருக்கலாம் என்று எண்ணிய போலீசார், அவரை அடித்து விசாரித்ததோடு, யோகி பாபு சொன்னதை நம்பாமல், ஸ்டேஷனிலேயே அவரை வைத்திருந்தார்களாம்.
பிறகு, நீண்ட நேரத்திற்குப் பிறகு யோகி பாபு மீது நம்பிக்கை வந்தவுடன், அவரை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...