தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக உயர்ந்திருக்கும் யோகி பாபு, இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், அவரை அனுகும் தயாரிப்பாளர்கள் பலரிடம் தேதி இல்லை என்றும் அவர் மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், யோகி பாபு நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் போலீஸ் அவரை சந்தேகத்தின் பேரில் பிரித்து அடித்ததோடு, ரொம்ப நேரமாக ஸ்டேஷனில் வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் யோகி பாபு, நாடகத்தில் நடித்து முடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்த யோகி பாபுவை போலீஸார் மடக்கி பிடித்து விசாரித்தார்களாம். அந்த நேரம் சென்னையில் சாலையில் நின்றுக் கொண்டிருக்கும் பைக்குகள், கார்களை மர்ம நபர் எரிக்கும் சம்பவம் பரபரப்பானதால், அந்த நபர் யோகி பாபுவாக இருக்கலாம் என்று எண்ணிய போலீசார், அவரை அடித்து விசாரித்ததோடு, யோகி பாபு சொன்னதை நம்பாமல், ஸ்டேஷனிலேயே அவரை வைத்திருந்தார்களாம்.
பிறகு, நீண்ட நேரத்திற்குப் பிறகு யோகி பாபு மீது நம்பிக்கை வந்தவுடன், அவரை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...