நீட் தீர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த அரியலூர் மாவட்ட மாணவி அனிதா தற்கொலை செதுக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாணவர்கள் பலரது மருத்துவ படிப்பு கனவை சிதைத்துள்ள நீட் என்ற எமனாலும் அனிதா உயிர் பறிக்கப்பட்டதற்கு ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்ப்பு குரல் கொடுத்து வருவதோடு, ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, சமூகவலைதளங்களில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி, மத்திய அரசும் மாநில அரசும் அனிதாவை கொலை செய்துவிட்டதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா!!! வயிறு எரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அனிதா தற்கொலைக்கு நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வந்தாலும், நேரடியாக மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிர்ப்பு கண்டனம் தெரிவித்ததில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு, நடிகை கஸ்தூரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...