நீட் தீர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த அரியலூர் மாவட்ட மாணவி அனிதா தற்கொலை செதுக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாணவர்கள் பலரது மருத்துவ படிப்பு கனவை சிதைத்துள்ள நீட் என்ற எமனாலும் அனிதா உயிர் பறிக்கப்பட்டதற்கு ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்ப்பு குரல் கொடுத்து வருவதோடு, ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, சமூகவலைதளங்களில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி, மத்திய அரசும் மாநில அரசும் அனிதாவை கொலை செய்துவிட்டதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா!!! வயிறு எரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அனிதா தற்கொலைக்கு நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வந்தாலும், நேரடியாக மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிர்ப்பு கண்டனம் தெரிவித்ததில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு, நடிகை கஸ்தூரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...