ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. விமர்ச ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்ற ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் கார்த்திக் சுப்புராஜ் இணைய இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் வேறு ஒரு ஹீரோவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார்.
ஆம், கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த பிறகு, கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க இருக்கிறாராம். அந்த கேப்பில், ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ் அதில் தனுஷை நடிக்க வைக்கப் போகிறாராம்.
சென்னையில் உள்ள திரையரங்கத்தில் நடைபெற்ற ‘பேட்ட’ வெற்றி விழா நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த தகவலை கூறினார்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...