80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த பானுப்ரியா, தற்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், 14 வயது சிறுமியை தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தி பானுப்ரியா கொடுமை படுத்துவதாகவும், அவரது சகோதரர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், சிறுமியின் அம்மா ஆந்திர மாநில காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் கொடுப்பதாக கூறி தனது மகளை அழைத்து சென்ற பானுப்ரியா, இதுவரை எந்த ஊதியமும் கொடுக்காமல் இருப்பதோடு, தனது மகளை கொடுமை படுத்துவதாகவும் தெரிவித்திருப்பவர், அவரது சகோதரர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும். கூறியிருக்கிறார்.
ஆனால், இந்த புகாரை மறுத்த பானுப்ரியா, சிறுமி தனது வீட்டில் திருடியதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம், அதனால் தான் எங்கள் மீது வீன் பழி சுமத்துகிறார்கள், என்று விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, சென்னையில் உள்ள பானுப்ரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமி சந்தியாவை மீட்ட, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்ப்படுத்தினார்கள். அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அந்த சிறுமி தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பானுப்ரியாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க, ஆந்திர குழந்தைகள் நலத்துறை, அம்மாநில டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், 14 வயதுடைய சிறுமியை வீட்டில் வேலை அமர்த்தியது சட்டப்படி குற்றம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, நடிகை பானுப்ரியா எந்த நேரத்திலும் ஆந்திர மாநில போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கோலிவுட்டில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...