’கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் தனது மனைவியை தேடி சென்னை வரும்போது அவருக்கு பாதுகாவலராக வருவதோடு, புதுச்சேரியி பிரெஞ்காரர் வீட்டில் அவர் இருப்பதை உறுதி செய்யும் வேடத்தில் நடித்தவர் தான் விஸ்வநாத். ‘அட்ட கத்தி’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் விஸ்வநாத், ‘கபாலி’ யில் ரஜினியிடம் “மெட்ராஸ் காருங்க சார் நம்புங்க..” என்று வசனம் பேசி ஒட்டுமொத்த சென்னை மக்களிடம் மட்டும் இன்றி தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.
‘கபாலி’ முடிந்த கையோடு இந்தி படம் ஒன்றில் கமிட் ஆன விஸ்வநாத், தற்போது தமிழில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். ‘ஒநாய்கள் ஜாக்கிரதை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரித்விகா ஹீரோயினாக நடிக்கிறார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.
எஸ் பயாஸ்கோப் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.பி.ஆர் இயக்கியுள்ளார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...