’கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் தனது மனைவியை தேடி சென்னை வரும்போது அவருக்கு பாதுகாவலராக வருவதோடு, புதுச்சேரியி பிரெஞ்காரர் வீட்டில் அவர் இருப்பதை உறுதி செய்யும் வேடத்தில் நடித்தவர் தான் விஸ்வநாத். ‘அட்ட கத்தி’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் விஸ்வநாத், ‘கபாலி’ யில் ரஜினியிடம் “மெட்ராஸ் காருங்க சார் நம்புங்க..” என்று வசனம் பேசி ஒட்டுமொத்த சென்னை மக்களிடம் மட்டும் இன்றி தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.
‘கபாலி’ முடிந்த கையோடு இந்தி படம் ஒன்றில் கமிட் ஆன விஸ்வநாத், தற்போது தமிழில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். ‘ஒநாய்கள் ஜாக்கிரதை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரித்விகா ஹீரோயினாக நடிக்கிறார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.
எஸ் பயாஸ்கோப் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.பி.ஆர் இயக்கியுள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...