’கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் தனது மனைவியை தேடி சென்னை வரும்போது அவருக்கு பாதுகாவலராக வருவதோடு, புதுச்சேரியி பிரெஞ்காரர் வீட்டில் அவர் இருப்பதை உறுதி செய்யும் வேடத்தில் நடித்தவர் தான் விஸ்வநாத். ‘அட்ட கத்தி’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் விஸ்வநாத், ‘கபாலி’ யில் ரஜினியிடம் “மெட்ராஸ் காருங்க சார் நம்புங்க..” என்று வசனம் பேசி ஒட்டுமொத்த சென்னை மக்களிடம் மட்டும் இன்றி தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.
‘கபாலி’ முடிந்த கையோடு இந்தி படம் ஒன்றில் கமிட் ஆன விஸ்வநாத், தற்போது தமிழில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். ‘ஒநாய்கள் ஜாக்கிரதை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரித்விகா ஹீரோயினாக நடிக்கிறார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.
எஸ் பயாஸ்கோப் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.பி.ஆர் இயக்கியுள்ளார்.
டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்" படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது...
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...