’கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் தனது மனைவியை தேடி சென்னை வரும்போது அவருக்கு பாதுகாவலராக வருவதோடு, புதுச்சேரியி பிரெஞ்காரர் வீட்டில் அவர் இருப்பதை உறுதி செய்யும் வேடத்தில் நடித்தவர் தான் விஸ்வநாத். ‘அட்ட கத்தி’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் விஸ்வநாத், ‘கபாலி’ யில் ரஜினியிடம் “மெட்ராஸ் காருங்க சார் நம்புங்க..” என்று வசனம் பேசி ஒட்டுமொத்த சென்னை மக்களிடம் மட்டும் இன்றி தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.
‘கபாலி’ முடிந்த கையோடு இந்தி படம் ஒன்றில் கமிட் ஆன விஸ்வநாத், தற்போது தமிழில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். ‘ஒநாய்கள் ஜாக்கிரதை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரித்விகா ஹீரோயினாக நடிக்கிறார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.
எஸ் பயாஸ்கோப் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.பி.ஆர் இயக்கியுள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...