Latest News :

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ரஜினி மகளின் மற்றொரு அதிரடி!
Thursday January-31 2019

ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா, அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிறகு மோஷன் அனிமேஷன் திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி அவர், ரஜினியை வைத்து ‘கோச்சுடையான்’ என்ற படத்தை இயக்கினார். அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

 

இதற்கிடையே செளந்தர்யாவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்தவர், நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்தும் பெற்றுவிட்டார். விவாகரத்துக்கு பிறகு தனுஷை ஹீரோவாக வைத்து ‘விஐபி 2’ படத்தை இயக்கியவர், தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான வணங்காமுடியின் மகன் விசாகனை காதலித்ததோடு, அவரை திருமணம் செய்துகொள்ளவும் ரெடியாகிவிட்டார்.

 

செளந்தர்யா - விசாகன் திருமணம் பிப்ரவரி 11 ஆம் தேதி, ரஜினிகாந்தின் சென்னை இல்லத்தில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது.

 

இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக செளந்தர்யா யாரும் எதிர்பாராத அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தொடராக தயாரிக்கப் போகிறாராம். 

 

மணிரத்னம் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சித்து முடியாமல் கைவிட்ட நிலையில், செளந்தர்யா அதை கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

4160

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery