80 களில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயப்பிரதா, ‘சலங்கை ஒலி’, ‘மன்மத லீலை’, ‘நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதோடு, இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல இந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.
தீவிர அரசியலில் ஈடுபட்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜெயப்பிரதா, தற்போது சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவர் தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஜெயப்பிரதா முன்னணி நடிகையாக இருந்த போது, அவரது புகைப்படத்தை ஆபாசமாக மாபிங் செய்து சில விசமிகள் வெளியிட்டார்களாம். அவை வெளியானதும், ஜெயப்பிரதா தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு ஒருவர் ஆசிட் மிரட்டல் விடுத்தாராம். இப்படி பல தடைகளையும், எதிர்ப்புகளையும் கடந்து தான் அவர் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் வெற்றி பெற்றிறாராம்.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...