80 களில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயப்பிரதா, ‘சலங்கை ஒலி’, ‘மன்மத லீலை’, ‘நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதோடு, இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல இந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.
தீவிர அரசியலில் ஈடுபட்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜெயப்பிரதா, தற்போது சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவர் தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஜெயப்பிரதா முன்னணி நடிகையாக இருந்த போது, அவரது புகைப்படத்தை ஆபாசமாக மாபிங் செய்து சில விசமிகள் வெளியிட்டார்களாம். அவை வெளியானதும், ஜெயப்பிரதா தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு ஒருவர் ஆசிட் மிரட்டல் விடுத்தாராம். இப்படி பல தடைகளையும், எதிர்ப்புகளையும் கடந்து தான் அவர் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் வெற்றி பெற்றிறாராம்.
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...