Latest News :

இரண்டாவது திருமணம்! - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய செளந்தர்யா
Monday February-04 2019

ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். குழந்தை செளந்தர்யாவிடம் வளரும் நிலையில், அஸ்வின் வேறு ஒரு திருமணம் செய்துக் கொண்டார்.

 

இதற்கிடையே, செளந்தர்யாவும் விசாகன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார். மிகப்பெரிய தொழிலதிபரான விசாகன் - செளந்தர்யா திருமணம் வரும் பிப்ரவரி 10,11 ஆகிய தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.

 

இந்த நிலையில், தனது மறுமணம் குறித்து முதல் முறையாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் செளந்தர்யா, தனது சமூக வலைதள பக்கத்தில் பட்டு புடவையுடன் போட்டோவை வெளியிட்டு, “இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Related News

4171

கியாரா அத்வானியை பாராட்டிய ‘டாக்ஸிக்’ இயக்குநர்!
Monday December-22 2025

2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல்  ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...

நடிகர் பிரபாஸின் புதிய முயற்சி!
Monday December-22 2025

உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

Recent Gallery