ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். குழந்தை செளந்தர்யாவிடம் வளரும் நிலையில், அஸ்வின் வேறு ஒரு திருமணம் செய்துக் கொண்டார்.
இதற்கிடையே, செளந்தர்யாவும் விசாகன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார். மிகப்பெரிய தொழிலதிபரான விசாகன் - செளந்தர்யா திருமணம் வரும் பிப்ரவரி 10,11 ஆகிய தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தனது மறுமணம் குறித்து முதல் முறையாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் செளந்தர்யா, தனது சமூக வலைதள பக்கத்தில் பட்டு புடவையுடன் போட்டோவை வெளியிட்டு, “இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்” என்று பதிவிட்டுள்ளார்.
#OneWeekToGo #BrideMode #Blessed 😊😊😊🙏🏻🙏🏻🙏🏻 #VedVishaganSoundarya #Family ❤️❤️❤️ pic.twitter.com/fJYkHp8J1l
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 4, 2019
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...