தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜாவை கெளரவிக்கும் வகையில், ‘இளையராஜா 75’ என்ற தலைப்பில் இரண்டு நாட்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களுடன், பிற மாநில சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில், இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வரிடம் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசை தாங்கள் கடவுளாக நினைப்பதாகக் கூறிய விஷால், அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என்றும் தெரிவித்தார்.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...