Latest News :

முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விஷால்!
Wednesday February-06 2019

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜாவை கெளரவிக்கும் வகையில், ‘இளையராஜா 75’ என்ற தலைப்பில் இரண்டு நாட்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களுடன், பிற மாநில சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.

 

இந்த நிலையில், இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

 

தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வரிடம் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழக அரசை தாங்கள் கடவுளாக நினைப்பதாகக் கூறிய விஷால், அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என்றும் தெரிவித்தார்.

Related News

4180

கியாரா அத்வானியை பாராட்டிய ‘டாக்ஸிக்’ இயக்குநர்!
Monday December-22 2025

2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல்  ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...

நடிகர் பிரபாஸின் புதிய முயற்சி!
Monday December-22 2025

உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

Recent Gallery