இயக்குநரும் நடிகருமான பார்த்திபனும், நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்களுக்கு கீர்த்தனா, அபிநயா ஆகிய இரண்டு மகள்களும், ராக்கி என்ற ஒரு மகனும் உள்ளார். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக சீதாவும், பார்த்திபனும் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார்கள். மகன் ராக்கி மற்றும் மகள் கீர்த்தனாவுடன் வசித்து வந்த நிலையில், அபிநயா மட்டும் சீதாவிடம் வசித்து வருகிறார்.
பார்த்திபன் - சீதா தம்பதியின் இளையமகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது மூத்த மகள் அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவரை மணக்க இருக்கும் நரேஷ் கார்த்திக், நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன். அதாவது, எம்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார்.
மகள் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு வரன்களை தவிர்த்து வந்த சீதா, நரேஷ் சென்னையில் இருப்பதால் அவரை ஓகே செய்தாராம். மேலும், மாப்பிள்ளை வீட்டார் சீதாவின் தூரத்து உறவாம்.
அபிநயா - நரேஷ் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற நிலையில், திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தற்போது மகளின் திருமணத்திற்காக சீதா அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...