‘வர்மா’ படம் கைவிடப்பட்டதும், அதற்கான காரணமும் தான் கோடம்பாக்கத்தின் தற்போதைய பரபரப்பு செய்தி. தேசிய விருது பல வாங்கிய படங்களை இயக்கிய பாலாவுக்கு இத்தகைய நிலையா? என்று பலர் ஆதங்கப்பட்டாலும், சிலரோ, “அவருக்கு இது வேணும்தான்” என்று புலம்பவும் செய்கிறார்கள்.
‘வர்மா’ படத்தை மிக மோசமாக பாலா எடுத்ததால் தான், படத்தை கைவிடுகிறோம், என்று தெரிவித்த தயாரிப்பு தரப்பு, அதே சமயம், வேறு ஒரு இயக்குநரை வைத்து, மீண்டும் துருவையே ஹீரோவாகவும் வைத்து எடுப்பதாகவும் அறிவித்திருக்கிறது.
இதற்கிடையே, பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை தங்களுக்கு போட்டுக் காட்டாமல் அழிக்க கூடாது, என்று இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த பல இயக்குநர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை கூறியிருக்கும் இயக்குநர் பாலா, ’வர்மா’ படத் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவித்தது தவறான தகவல், என்று கூறியிருக்கிறார்.
மேலும், படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது தான் எடுத்த முடிவு, அதற்காக கடந்த கனவரி மாதமே தயாரிப்பாளருடன் தான் ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக, தெரிவித்திருக்கும் பாலா, ஒப்பந்த பத்திரத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
இத்துடன், துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருது, இந்த விவகாரம் தொடர்பாக வேறு எதுவும் பேச விரும்பவில்லை, என்று இயக்குநர் பாலா கூறியிருக்கிறார்.
மொத்தத்தில், பாலாவின் மவுனத்திற்கு பின்னால் துருவ் விக்ரம் இருப்பதோடு, வேறு ஏதோ ரகசியம் இருப்பதும் உறுதியாகிவிட்டது.
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...