‘வர்மா’ படம் கைவிடப்பட்டதும், அதற்கான காரணமும் தான் கோடம்பாக்கத்தின் தற்போதைய பரபரப்பு செய்தி. தேசிய விருது பல வாங்கிய படங்களை இயக்கிய பாலாவுக்கு இத்தகைய நிலையா? என்று பலர் ஆதங்கப்பட்டாலும், சிலரோ, “அவருக்கு இது வேணும்தான்” என்று புலம்பவும் செய்கிறார்கள்.
‘வர்மா’ படத்தை மிக மோசமாக பாலா எடுத்ததால் தான், படத்தை கைவிடுகிறோம், என்று தெரிவித்த தயாரிப்பு தரப்பு, அதே சமயம், வேறு ஒரு இயக்குநரை வைத்து, மீண்டும் துருவையே ஹீரோவாகவும் வைத்து எடுப்பதாகவும் அறிவித்திருக்கிறது.
இதற்கிடையே, பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை தங்களுக்கு போட்டுக் காட்டாமல் அழிக்க கூடாது, என்று இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த பல இயக்குநர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை கூறியிருக்கும் இயக்குநர் பாலா, ’வர்மா’ படத் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவித்தது தவறான தகவல், என்று கூறியிருக்கிறார்.
மேலும், படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது தான் எடுத்த முடிவு, அதற்காக கடந்த கனவரி மாதமே தயாரிப்பாளருடன் தான் ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக, தெரிவித்திருக்கும் பாலா, ஒப்பந்த பத்திரத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
இத்துடன், துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருது, இந்த விவகாரம் தொடர்பாக வேறு எதுவும் பேச விரும்பவில்லை, என்று இயக்குநர் பாலா கூறியிருக்கிறார்.
மொத்தத்தில், பாலாவின் மவுனத்திற்கு பின்னால் துருவ் விக்ரம் இருப்பதோடு, வேறு ஏதோ ரகசியம் இருப்பதும் உறுதியாகிவிட்டது.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...