தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய்க்கு தமிழக மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும், கேரளாவில் எந்த ஒரு தமிழ் நடிகர்களுக்கும் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
விஜயின் ஒவ்வொரு படமும் நேரடியாக கேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்று வருகிறது. இதனால், விஜய் படம் வெளியாகும் போது, மலையாள முன்னணி ஹீரோக்களே தங்களது படங்களில் ரிலீஸை தள்ளி வைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில், கேரளாவில் மம்மூட்டி மற்றும் மோகன்லாலை விட விஜய்க்கு தான் அதிகம் ரசிகர்கள் உள்ளார்கள் என்று அம்மாநில எம்.எல்.ஏ பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள எம்.எல்.ஏ ஜார்ஜ் என்பவர், தொலைக்காட்சி விவாதம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, ”கேரளாவில் தமிழ் நடிகர் விஜய் படம் ரிலிஸாகும் போது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். இங்கு, மம்மூட்டி மற்றும் மோகன்லாலை விட விஜய்க்கு தான் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
ஜார்ஜ்ஜின் இத்தகைய கருத்து விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினாலும், மம்மூட்டி மற்றும் மோகன்லால் ரசிகர்களை கடுப்படிக்க வைத்திருக்கிறது. இதனால், எம்.எல்.ஏ ஜார்ஜ்ஜை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...