தமிழ் சினிமாவில் முக்கிய கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சோனா, திடீரென சொந்தமாக திரைப்படம் தயாரித்தார். ஆனால், அதில் பெருத்த நஷ்ட்டம் அடைந்ததோடு, தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாகவும் புகார் கூறினார்.
மேலும், தனக்கு பின்னணி பாடகர் எஸ்.பி.பி.சரண், பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஊடகங்களிடம் பகீரங்கமாக புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், பிறகு தனது வாழ்க்கையை புத்தமாக எழுத இருப்பதாகவும், அதில் பல முக்கிய புள்ளிகளின் ரகசியங்களை வெளியிடப் போவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சோனா அப்படி அறிவித்த சில நாட்களில், தனக்கு மிரட்டல் வருகிறது என்றும் கூறியவர், தனது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க இருப்பதாகவும் கூறினார்.
இப்படி பல வகையில் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய சோனா, தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்தார். பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் சோனா, காணாமல் போக, தற்போது மீண்டும் சில படங்களில் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், காதலர் தினம் குறித்து ஊடகம் ஒன்றில் சமீபத்தில் பேசிய நடிகை சோனா, தனக்கும் காதலுக்கும் ராசியே இல்லை. நான் இரண்டு பேரை காதலித்திருக்கிறேன், ஆனால் அந்த இரண்டு காதலும் தோல்வியில் தான் முடிந்தது, என்று கவலையோடு கூறினார்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...