Latest News :

நா.முத்துகுமார் பாட்டுக்கு தேசிய விருது! - ரசிகர்கள் நம்பிக்கை
Saturday February-16 2019

லஷ்மி கிரியேசன்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘பெட்டிக்கடை’. இதில் ஹீரோவாக நடிக்கும் சமுத்திரக்கனி, பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ’மொசக்குட்டி’ வீரா நடிக்கிறார். 

 

கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், தயாரிக்கவும் செய்திருக்கிறார். மரியா மனோகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மறைந்த நா.முத்துக்குமார், சினேகன், இசக்கி கார்வண்ணன், மடத்தமிழ் வேந்தன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

இப்படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய “சுடல மாட சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட...சொல்லு புள்ள...” என்ற பாடல் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதோடு, ரசிகர்களின் பாராட்டு மழையிலும் நனைந்து வருகிறது. மேலும், ஏற்கனவே பல தேசிய விருதுகளை பெற்றிருக்கும் நா.முத்துக்குமார், இப்படாலின் மூலமும் தேசிய விருது பெறுவார், என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

Pettikkadai

 

‘பெட்டிக்கடை’ வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

4235

ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - நடிகர் சாந்தனு
Saturday September-20 2025

தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

Recent Gallery