’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானார். இருப்பினும், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பிரபல பெங்காலி நாளிதழ் ஒன்று யாஷிகா ஆனந்த் தற்கொலை செய்துக் கொண்டதாக, புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்து ரசிகர்களை மட்டும் அல்ல யாஷிகா ஆனந்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விசாரித்ததில், சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை யாஷிகா என்பவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவரைப் பற்றிய செய்தியை போட்டிருக்கும் அந்த நாளிதழ், அந்த செய்தியில் யாஷிகா என்ற நடிகையின் புகைப்படத்திற்கு பதில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்டுவிட்டனர்.
இந்த விஷயம் அறிந்த யாஷிகா ஆனந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கோபத்தை ”What the hell :O" என்ற வார்த்தையால் வெளிப்படுத்தியுள்ளார்.

2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...