’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானார். இருப்பினும், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பிரபல பெங்காலி நாளிதழ் ஒன்று யாஷிகா ஆனந்த் தற்கொலை செய்துக் கொண்டதாக, புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்து ரசிகர்களை மட்டும் அல்ல யாஷிகா ஆனந்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விசாரித்ததில், சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை யாஷிகா என்பவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவரைப் பற்றிய செய்தியை போட்டிருக்கும் அந்த நாளிதழ், அந்த செய்தியில் யாஷிகா என்ற நடிகையின் புகைப்படத்திற்கு பதில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்டுவிட்டனர்.
இந்த விஷயம் அறிந்த யாஷிகா ஆனந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கோபத்தை ”What the hell :O" என்ற வார்த்தையால் வெளிப்படுத்தியுள்ளார்.

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...