பிரபல பின்னணி பாடகி சின்மயி, கடந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது மீ டூ புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தொடர்ந்து பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிய அவர், சினிமா பிரபலங்கள் மீது பல பெண்கள் தெரிவித்த பாலியல் புகார்களையும், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த வரிசையில், பிரபல பாடகரான கார்த்திக், பல பெண்களிடம் தவறான மெசேஜ் அனுப்புவது, தவறாக தொடுவது என மோசமாக நடந்துகொள்வார் என வெளிநாட்டு தமிழ் பாடகி ஒருவர் புகார் கூறினார். அவரது இந்த புகாரை சின்மயி, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
ஆனால், இது தொடர்பாக அப்போது பாடகர் கார்த்திக் எந்தவித விளக்கமோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்காத நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”எனக்கு தெரிந்து நான் யாரையும் அப்படி செய்யவில்லை. அப்படி இருந்தால் வாருங்கள், மன்னிப்பு கேட்கிறேன் - சட்ட ரீதியாக நடவடிக்கையை எதிர்கொள்ளவும் தயார்” என்று தெரிவித்துள்ளார்.
— Karthik Music Exp (@singer_karthik) February 18, 2019
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...