தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதோடு, சில புகைப்படங்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார்.
மேலும், சென்னையில் முகாமிட்ட ஸ்ரீரெட்டி, பத்திரிகையாளர்கள் முன்பு தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நிலையில், ராகவா லாரன்ஸ் அவருக்கு பட வாய்ப்பு அளித்தார். அதை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்ற ஸ்ரீரெட்டி, சென்னையிலேயே செட்டிலாகப் போவதாகவும் அறிவித்தார்.
இப்படி பரபரப்பு புகார் கூறிய ஸ்ரீரெட்டி, சில மாதங்களாக எந்தவித புகாரும் கூறாமல் இருந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் மீது புகைப்படத்துடன் பாலியல் புகார் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் கொரடாலா சிவாவை, “இவர் காமசூத்ராவின் பாஸ்”, ”இவர் நம்பர் 1, மோசமானவர்” என்று விமர்சித்திருப்பதோடு, பெயர் குறிப்பிடாமல் இருவர் ஒன்றாக இருக்கும் ஒரு ஆபாச படத்தையும் வெளியிட்டுள்ளார்.


பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...