தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதோடு, சில புகைப்படங்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார்.
மேலும், சென்னையில் முகாமிட்ட ஸ்ரீரெட்டி, பத்திரிகையாளர்கள் முன்பு தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நிலையில், ராகவா லாரன்ஸ் அவருக்கு பட வாய்ப்பு அளித்தார். அதை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்ற ஸ்ரீரெட்டி, சென்னையிலேயே செட்டிலாகப் போவதாகவும் அறிவித்தார்.
இப்படி பரபரப்பு புகார் கூறிய ஸ்ரீரெட்டி, சில மாதங்களாக எந்தவித புகாரும் கூறாமல் இருந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் மீது புகைப்படத்துடன் பாலியல் புகார் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் கொரடாலா சிவாவை, “இவர் காமசூத்ராவின் பாஸ்”, ”இவர் நம்பர் 1, மோசமானவர்” என்று விமர்சித்திருப்பதோடு, பெயர் குறிப்பிடாமல் இருவர் ஒன்றாக இருக்கும் ஒரு ஆபாச படத்தையும் வெளியிட்டுள்ளார்.


2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...