தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதோடு, சில புகைப்படங்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார்.
மேலும், சென்னையில் முகாமிட்ட ஸ்ரீரெட்டி, பத்திரிகையாளர்கள் முன்பு தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நிலையில், ராகவா லாரன்ஸ் அவருக்கு பட வாய்ப்பு அளித்தார். அதை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்ற ஸ்ரீரெட்டி, சென்னையிலேயே செட்டிலாகப் போவதாகவும் அறிவித்தார்.
இப்படி பரபரப்பு புகார் கூறிய ஸ்ரீரெட்டி, சில மாதங்களாக எந்தவித புகாரும் கூறாமல் இருந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் மீது புகைப்படத்துடன் பாலியல் புகார் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் கொரடாலா சிவாவை, “இவர் காமசூத்ராவின் பாஸ்”, ”இவர் நம்பர் 1, மோசமானவர்” என்று விமர்சித்திருப்பதோடு, பெயர் குறிப்பிடாமல் இருவர் ஒன்றாக இருக்கும் ஒரு ஆபாச படத்தையும் வெளியிட்டுள்ளார்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...